
தேவையான பொருட்கள்:-
வெள்ளை அரிசிமா (பச்சை) - 2 சுண்டு
உழுத்தம் பருப்பு- ½ சுண்டு
நற்சீரகம் - 1 ½ தே.க
மிளகு - 1 தே.க
எள்ளு - 1 மே.க
மஞ்சள் தூள், உப்பு அளவாக
தேங்காய்ப்பால் - 1 கப்
தே.எண்ணெய் - ½ போத்தல்
செய்முறை:-
உழுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைத்துச் சுத்தமாக்கிப் பட்டுப்போல் அரைக்கவும்.
சீரகம், மிளகு, மஞ்சள் என்பவற்றைப் பசுந்தாக அரைத்து மாவுடன் கலந்து எள்ளையும் சேர்த்துக் கொள்ளவும்.
தேங்காய்ப்பாலுடன் உப்புச் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு சூடு ஆறமுதல் மாவுக்குள் விட்டுக்கலவையை ஒன்று சேர இறுக்கமாகக் குழைக்கவும்.
பின் முறுக்கு அச்சு உரலில் மாவையிட்டுக் கொதித்த எண்ணெயில் பிழிந்து பொன் நிறமாகப் பொரித்தெடுக்கவும்.





