
தேவையான பொருட்கள்:-
உருளைக்கிழங்கு - 500 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 25 கிராம்
மஞ்சள் தூள், உப்பு அளவாக
மிளகாய்த்தூள் - அளவாக
கடலைமா அல்லது கோதுமை மா - 250 கிராம்
கடுகு, பெருஞ்சீரகம் - அளவாக
அப்பச்சோடா - 1 தே.க
தே.எண்ணெய் - 1 போத்தல்
கறிவேப்பிலை அளவாக
செய்முறை:-
உருளைக்கிழங்கை அவித்து மசித்துக் கொள்க.
எண்ணெயில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கடுகு, பெருஞ்சீரகம் இவற்றை வதக்கவும்.
கிழங்கு மசியலையும் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்ப் பொடிகளையும் சேர்த்துப் பின் உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.
மாவை அப்பச்சோடா, உப்புச் சேர்த்து இறுக்கமாகக் கரைக்கவும்.
அக்கரைசலில் உருண்டைகளை நன்கு தோய்த்துப் பொன்நிறமாகப் பொரித்தெடுக்கவும்.





